Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடிக்கு ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்

ஆகஸ்டு 24, 2019 02:21

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் இன்று(ஆக.,24) காலமானார். பா.ஜ. மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெட்லி மறைவு குறித்து அறிந்த பிரதமர் மோடி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, ஜெட்லி குடும்பத்தினர், மோடியிடம், இந்த முக்கியமான வெளிநாட்டு பயணம் தடையின்றி தொடர வேண்டும் எனவும், பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்